சோமனூர் பேருந்து கட்டிட விபத்தில் காயமடைந்தவருக்கு அரசின் நிவாரணம் கிடைப்பதில் தாமதம் - பணம் செலுத்தாமல் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை மறுப்பு, உறவினர்கள் போராட்டம்

சோமனூரில் பேருந்து கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமைடந்தனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகையாக அறிவித்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000, காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கினார். 

மேலும், பலத்த காயமடைந்தவர்களின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பேருந்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் கால் முறிந்த கல்லூரி மாணவி லதா மற்றும் விவசாயி மாரப்பன் ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அனைத்து சிகிச்சைகளும் முடிந்த நிலையில், மாரப்பன் வீடு திரும்பவுதாக இருந்தது. ஆனால், மொத்தம் ரூ.3,30,000 மருத்து செலவில், ரூ.1,50,000 ரூபாய் மட்டுமே அவர் செலுத்தியிருந்தார். இதனால், மாரப்பனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவ நிர்வாகம் மறுத்தது. எஞ்சிய தொகையை செலுத்தி விட்டு செல்லுமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 



மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாரப்பனின் உறவினர்கள், மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனையின் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, கால்முறிந்த கல்லூரி மாணவிக்கு அரசு பணி வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 இது தொடர்பாக பிரபல தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரபாத் விவேகானந்தன் பேசுகையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாரப்பனின் மொத்த மருத்துவ செலவு ஐ.3,30,000 ஆகும். மருத்துவமனையில் அனுமதிக்கும் போது ரூ.1,20,000 செலுத்தினார். எஞ்சிய தொகையான ரூ.2,00,000 செலுத்திவிட்டு டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வந்து பார்த்து விட்டு சென்றனர். அப்போது, இங்கேயே சிகிச்சையை தொடருங்கள் எனக் கூறினர். ஆனால்,  மருத்துவச் செலவுகளை ஏற்பது குறித்து எந்த தகவலும் அவர்கள் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...