கேரளாவைச் சேர்ந்த பி.கே. ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பாபு கலையில் என்பவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆசிய கண்டத்தை ஒட்டிய பகுதிகளில் அதாவது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் உணரப்படும். நிலநடுக்கத்தை தொடர்ந்து, ”சீஸ்மா” என்ற பலத்த புயல் ஏற்படும் இருக்கிறது. இந்த புயலின் போது, ராட்சத சுனாமி அலைகளும் ஏற்படும். இந்த நிலநடுக்கம் மற்றும் புயல் அபாயங்கள் இ.எஸ்.பியின் உதவியுடன் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.