ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார். பேரறிவாளனின் ஒரு மாத பரோல் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இந்நிலையில், தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டதற்கான நகல் மத்திய புழல் சிறை தலைமை அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் 24-ம் தேதி வரை பரோல் வழக்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளன் மற்றும் அவரது பெற்றோரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, பேரறிவாளன் வீட்டில் இருந்து 10 மீட்டர் தூரம் தாண்டி வெளியே செல்ல கூடாது, வெளிநபர்கள் பேரறிவாளன் வீட்டில் தங்க கூடாது, அவருக்கு 24 மணி நேரமம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டதற்கான நகல் மத்திய புழல் சிறை தலைமை அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் 24-ம் தேதி வரை பரோல் வழக்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளன் மற்றும் அவரது பெற்றோரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, பேரறிவாளன் வீட்டில் இருந்து 10 மீட்டர் தூரம் தாண்டி வெளியே செல்ல கூடாது, வெளிநபர்கள் பேரறிவாளன் வீட்டில் தங்க கூடாது, அவருக்கு 24 மணி நேரமம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.