தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது - தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும், தமிழகத்தில் 72 ஆயிரம் கோடி தொழில் முதலீடு பெறப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தொழில்துறை சார்பாக நடைபெறும்  தொழில் வசதிச் சட்டம் மற்றும் விதிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னையில் 267 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து வருவதாகவும், அங்கு பல நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் துறையினருக்கான ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னணி மாநிலமாக திகழவதாகவும், தமிழகத்தில் 72 ஆயிரம் கோடி தொழில் முதலீடு பெறப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை பன்னாட்டு விமான நிலைய  விரிவாக்க பணிகள் மற்றும் கோவையில் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...