ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக்கிங்குக்கு கட்டுப்பாடு! ஏழு வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் ஏழு வங்கிகளைச் சேர்ந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக ஐ.ஆர்.சி.டி.சி மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணமாகப் பிடிக்கப்படும் 20 ரூபாயை ரத்து செய்தது. மேலும், இந்த வருவாய் இழப்பை வங்கிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. இழப்புத் தொகை 20 ரூபாயில் ஐ.ஆர்.சி.டி.சி 10 ரூபாயையும் வங்கி நிர்வாகம் 10 ரூபாயையும் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால், சில வங்கிகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதையடுத்து ஏழு வங்கிகளின் கார்டுகளில் இருந்து மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் டிக்கெட்டை புக் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, யுனைடெட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கிகளின் கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...