ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக்கிங்குக்கு கட்டுப்பாடு! ஏழு வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் ஏழு வங்கிகளைச் சேர்ந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக ஐ.ஆர்.சி.டி.சி மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணமாகப் பிடிக்கப்படும் 20 ரூபாயை ரத்து செய்தது. மேலும், இந்த வருவாய் இழப்பை வங்கிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. இழப்புத் தொகை 20 ரூபாயில் ஐ.ஆர்.சி.டி.சி 10 ரூபாயையும் வங்கி நிர்வாகம் 10 ரூபாயையும் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால், சில வங்கிகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதையடுத்து ஏழு வங்கிகளின் கார்டுகளில் இருந்து மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் டிக்கெட்டை புக் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, யுனைடெட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கிகளின் கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...