கோவையில் முதல் முறையாக ஹெச்.அண்ட் எம். ஆடை அலங்காரக் கடை திறப்பு

ஆடை, அலங்கார விற்பனையகத்தில் சர்வதேச தரம் வாய்ந்த ஹெச் அண்ட் எம் எனப்படும் ஹென்னிஸ் அண்ட் மவுரிட்ஸ் ஏபி, ((H&M), Hennes & Mauritz AB) குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை நிறுவியுள்ளது. 

இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஹெச்.அண்ட் எம். ஆடை, அலங்கார விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் முதல் முறையாக தனது பாதத்தை பதித்துள்ளது. கோவை, சத்தி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ப்ரோஷான் வணிகவளாகத்தில் (Prozone Mall) ஹெச் அண்ட் எம் விற்பனையகம் இன்று (22.09.2017) திறக்கப்பட்டது. 



ஹெச். அண்ட் எம். நிறுவனத்தின் இந்திய மேலாளர் ஜென்னி எய்னோலா மற்றும் பிராந்திய மேலாளர் மிக்கோ அலட்டோலா மற்றும் கடையின் மேலாளர் ஹரிஹரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, கடையை திறந்து வைத்தனர். அப்போது, ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த ஆடை வடிவமைப்புக்களை பார்வையிட்டனர். 

 கடையில் முதல் 3 வாடிக்கையாளக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ. 5,000 மதிப்பிலான பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. ப்ரோஷான் வணிகவளாகத்தில் இரண்டு தளங்களை கொண்ட ஹெச். அண்ட் எம். ஆடை அலங்கார விற்பனையகம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். 



இந்தப் புதியக் கடையில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு புதிய புதிய டிசைன்கள் வந்திருப்பதாக கடையின் மேலாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...