கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோத் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில், ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக கூறப்படுகிறது. இது தொடர்பாக அண்மையில் இருவரும் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் செல்வம் ஆகியோரை மர்ம நபர்கள் சிலர் இன்று (22.0902017) காலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த செல்வபுரம் போலீஸார், சூர்யா, பாபுஜி, மோகன், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் செல்வம் ஆகியோரை மர்ம நபர்கள் சிலர் இன்று (22.0902017) காலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த செல்வபுரம் போலீஸார், சூர்யா, பாபுஜி, மோகன், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.