கோவை செல்வபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரட்டைக் கொலை - 4 பேர் கைது

கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோத் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில், ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக கூறப்படுகிறது. இது தொடர்பாக அண்மையில் இருவரும் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்துள்ளனர். 



இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் செல்வம் ஆகியோரை மர்ம நபர்கள் சிலர் இன்று (22.0902017) காலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த செல்வபுரம் போலீஸார்,  சூர்யா, பாபுஜி, மோகன், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்விரோதம் காரணமாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...