தூண்டுதலால் நடைபெற்றதா அனிதாவின் தற்கொலை- விசாரணை மேற்கொள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு

மாணவி அனிதாவின் மரணம் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட தற்கொலையா என விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் சம்பள பிரச்சனை, லீட் வங்கி, தாட்கோ செயல்பாடு குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தற்போது நடைபெற்றது. 

கோவை மாவட்டம் முழுவதும் 96 வழக்குகளில் 348.85 ஏக்கர் பஞ்சமி நிலம் கண்டறியப்பட்டு அது தொடர்பாக நோட்டிஸ் அனுப்பப்பட்டு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி இட ஒதுக்கீடு அனைத்து பள்ளியிலும் வழங்கப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீறினால் ஒப்பந்ததாரர் உரிமம் ரத்து செய்யப்படும். 

கோவை மாநகராட்சியில் தண்ணீர் வரி பிரச்சனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகை எவ்வளவு தாழ்த்தப்பட்ட பகுதிகளில் செலவு செய்யப்படுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் விசாரணை செய்யப்படும். அரியலூர் மாணவி அனிதா மரணம் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட தற்கொலையா என விசாரணை நடத்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரி சமூக நீதி கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கோரிக்கை குறித்தான மனு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...