தூண்டுதலால் நடைபெற்றதா அனிதாவின் தற்கொலை- விசாரணை மேற்கொள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு

மாணவி அனிதாவின் மரணம் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட தற்கொலையா என விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் சம்பள பிரச்சனை, லீட் வங்கி, தாட்கோ செயல்பாடு குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தற்போது நடைபெற்றது. 

கோவை மாவட்டம் முழுவதும் 96 வழக்குகளில் 348.85 ஏக்கர் பஞ்சமி நிலம் கண்டறியப்பட்டு அது தொடர்பாக நோட்டிஸ் அனுப்பப்பட்டு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி இட ஒதுக்கீடு அனைத்து பள்ளியிலும் வழங்கப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீறினால் ஒப்பந்ததாரர் உரிமம் ரத்து செய்யப்படும். 

கோவை மாநகராட்சியில் தண்ணீர் வரி பிரச்சனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகை எவ்வளவு தாழ்த்தப்பட்ட பகுதிகளில் செலவு செய்யப்படுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் விசாரணை செய்யப்படும். அரியலூர் மாணவி அனிதா மரணம் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட தற்கொலையா என விசாரணை நடத்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரி சமூக நீதி கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கோரிக்கை குறித்தான மனு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...