கோவை மாநகராட்சி தெற்கு பகுதியில் ரூ.90 லட்சம் செலவிலான திட்டப்பணிகள் தொடக்கம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 91-வது வார்டு கோவைபுதூர் பிரிவு, மேற்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து இன்று (22.09.2017) தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 86-வது வார்டு கரும்புக்கடை, பொன்விழா நகர் பகுதியில் ரூ.72 லட்சம் செலவில் நகர்நல மையம் அமைக்கும் பணியையும், 92-வது வார்டு விஜயலட்சுமி மில்ஸ் பகுதியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நிழற்குடை அமைக்கும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சிகளில், துணை ஆணையாளர் காந்திமதி,  தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...