அகில இந்திய தொழிற்பழகுநர் (தனிநபர் தேர்வு) அறிவிப்பு

மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் (NAC) பெறும் பொருட்டு, அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற்பிரிவில் பயின்று தேசிய தொழிற்சான்றிதழ் (NTC) தொழிற்பிரிவில் தனிநபராக அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று (ITI) தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சியினை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம்பெற்ற தொழிற் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்கள் மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற விரும்பினால் தனி விண்ணப்பதாரராக மத்திய அரசால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ளலாம். 

தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:

  • 07.11.2017 - கோட்பாட்டுத் தேர்வு (theory) (காலை: 9.30 மணிக்கு), வேலைவாய்ப்பு திறன் தேர்வு (மதியம் : 02.30 மணிக்கு).
  • 08.11.2017 - தொழிற்சாலை கணக்கீடு மற்றும் அறிவியல் தேர்வு (காலை: 9.30 மணிக்கு), பொறியியல் வரைதல்(மதியம் : 02.30 மணிக்கு).
  • 09,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செய்முறைத் தேர்வு நடக்கிறது (காலை: 9.30 மணிக்கு).


கோவை, அம்பத்தூர், கிண்டி, வடசென்னை, வேலூர், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், சேலம், ஒசூர், தாராபுரம், மேட்டூர் அணை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் / அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மைய உதவி இயக்குநர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு பிற விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். 

தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate -NAC) வழங்கப்படும். 

தேர்வுக்கான விண்ணப்பம் அந்தந்த அரசு தொடர் அறிவுரை மையங்களில் உள்ள உதவி இயக்குநர்களை அணுகி பெற்று இதனை தட்டச் செய்து விபரங்களை பூர்த்தி செய்து, மேற்கூறப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர் அறிவுரை மையங்களில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழியாக மட்டுமே சமர்பிக்க வேண்டும். 

தேர்வு கட்டணம் ரூ.200-ஐ 0230-LABOUR AND EMPLOYMENT -800- OTHER RECEIPTS, AC - CRAFTSMEN TRAINING SCHEME 05 - APPRENTICES ACT, DPC NO.0230-00800-AC-0508 என்ற கணக்குத் தலைப்பில் சார்பு கருவூலம்/மாவட்ட கருவூலங்களில் செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தலாம். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...