அகில இந்திய தொழிற்பழகுநர் (தனிநபர் தேர்வு) அறிவிப்பு

மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் (NAC) பெறும் பொருட்டு, அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற்பிரிவில் பயின்று தேசிய தொழிற்சான்றிதழ் (NTC) தொழிற்பிரிவில் தனிநபராக அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று (ITI) தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சியினை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம்பெற்ற தொழிற் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்கள் மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற விரும்பினால் தனி விண்ணப்பதாரராக மத்திய அரசால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ளலாம். 

தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:

  • 07.11.2017 - கோட்பாட்டுத் தேர்வு (theory) (காலை: 9.30 மணிக்கு), வேலைவாய்ப்பு திறன் தேர்வு (மதியம் : 02.30 மணிக்கு).
  • 08.11.2017 - தொழிற்சாலை கணக்கீடு மற்றும் அறிவியல் தேர்வு (காலை: 9.30 மணிக்கு), பொறியியல் வரைதல்(மதியம் : 02.30 மணிக்கு).
  • 09,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செய்முறைத் தேர்வு நடக்கிறது (காலை: 9.30 மணிக்கு).


கோவை, அம்பத்தூர், கிண்டி, வடசென்னை, வேலூர், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், சேலம், ஒசூர், தாராபுரம், மேட்டூர் அணை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் / அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மைய உதவி இயக்குநர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு பிற விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். 

தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate -NAC) வழங்கப்படும். 

தேர்வுக்கான விண்ணப்பம் அந்தந்த அரசு தொடர் அறிவுரை மையங்களில் உள்ள உதவி இயக்குநர்களை அணுகி பெற்று இதனை தட்டச் செய்து விபரங்களை பூர்த்தி செய்து, மேற்கூறப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர் அறிவுரை மையங்களில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழியாக மட்டுமே சமர்பிக்க வேண்டும். 

தேர்வு கட்டணம் ரூ.200-ஐ 0230-LABOUR AND EMPLOYMENT -800- OTHER RECEIPTS, AC - CRAFTSMEN TRAINING SCHEME 05 - APPRENTICES ACT, DPC NO.0230-00800-AC-0508 என்ற கணக்குத் தலைப்பில் சார்பு கருவூலம்/மாவட்ட கருவூலங்களில் செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தலாம். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...