ஈரோட்டில் பல்வேறு ரயில்வே வசதிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோஹிரி திறந்து வைத்தார்

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோஹிரி இன்று ஈரோடு ரயில்நிலையத்தை ஆய்வு செய்ததுடன், ஈரோட்டில் பல்வேறு ரயில்வே வசதிகளை திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், ஈரோடு ரயில்நிலையத்தில் முன்பிருந்த தண்ணீர் பிரச்சனை தற்போது இல்லை என்றும், தற்போது அனைத்து ரயில்களிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  காவேரி நதியில் இன்று அவர் திறந்து வைத்த நீரேற்று நிலையம் மூலமாக பெறப்படும் தண்ணீர் ரயில்நிலையம், மற்றும் ரயில்வே காலனிகளுக்கு சப்ளை செய்யப்படுவதுடன், உபரி நீர் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக கூறினார்.

ஈரோடு ரயில்நிலையத்தில் மின்தூக்கி மற்றும் நகரும் மின்படிக்கட்டுகள் (Lifts and Escalators) பணி தாமதமாகி வருவதற்கு மண் சப்ளை பற்றாக்குறையும் கட்டுமான ஒப்பந்தக்காரர்களுடன் GST பற்றிய ஒன்றிய கருத்தின்மையுமே காரணம் என்றும், விரைவில் இப்பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.  

மேலும், சேலம் கோட்டத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா அமைபதற்கான கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், நிர்பயா நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், அவற்றை பொருத்தும் பணி ரயில்டெல் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.  

பின்னர், அவர் ஈரோட்டில் உள்ள டீசல் ரயில் எஞ்சின் பணிமனையில் புதியதாக 2.2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருட்கிடங்கையும், காவேரி நதிக்கரையில் 2.8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் அர்ப்பணித்தார்.  

ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து 1326 மெட்ரிக் டன் கோழித்தீவனம் கொண்ட ரயிலை ஈரோடு எஸ்கேஎம் அனிமல் புட்ஸ் நிறுவனம் தனது கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தொழிற்சாலைக்கு புக்கிங் செய்துள்ள சிறப்பு சரக்கு ரயிலை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர்  வர்மா, சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.    

                              

ஈரோட்டில் இருந்து இம்மாதிரி சரக்கு புக்கிங்  செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். முதல் முறை புக்கிங் செய்யப்பட்ட சரக்கின் மூலமாக ரயில்வேக்கு 12.95 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. எஸ்கேஎம் அனிமல் புட்ஸ் நிறுவனம் இது போன்று ஒரு மாதத்திற்கு சுமார் 7000 மெட்ரிக் டன்கள் புக்கிங் செய்து அனுப்பவும் அதற்காக சாவடிபாளையத்தில் ஒரு புதிய சரக்கு ஏற்றும் முனையத்தை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் ரயில்வேயுடன் இணைந்து அமைக்கவும் முன்வந்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...