தமிழகம் - கேரளா எல்லையில் மாவோயிஸ்ட் கைது


தமிழக கேரள கர்நாடக எல்லையான முச்சந்திப்பில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை பலப்படுத்த மாவோயிஸ்டுகள் சமீப காலமாக முனைப்பு காட்டி வருகின்றனர். இதனை தடுக்க இரு மாநில போலீஸார் தீவிர தடுப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த நவம்பரில் தமிழக கேரளா வனப்பகுதியான கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில், தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையேயான மோதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. 

இந்நிலையில், இன்று (21.09.2017) தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி அடுத்த அகளி வனப்பகுதியில் மவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ் என்பவரை கேரள போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பரமக்குடியை சேர்ந்தவர் என்றும், இவர் கடந்த 2015ல் கேரள வனத்துறை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளது. 

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...