வணிகர்கள், வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

உணவு பாதுகாப்பு மற்றும தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் உணவு பொருள் வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையில், உரிமம் மற்றும் பதிவுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, உணவு பொருள் தயாரிப்பவர்கள், இருப்பு வைப்பவர்கள், விநியோகம் செய்வோர், உணவு விடுதிகள், ஹோட்டல், பேக்கரிகள், தள்ளு வண்டிகள் உள்ளிட்ட உணவு விநியோகிகும் வாகனங்கள், இறைச்சி கடைகள், கோயில் பிரசாத கடைகள், இலவச உணவு மையங்கள் மற்றும் உணவு கையாளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்வது அவசியமாகும்.

வருடாந்திர வியாபாரம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்வோர் ரூ.100 செலுத்தி  அந்தந்த பகுதியில் உள்ள பொதுசேவை மையங்களின் மூலம் பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்யும் தயாரிப்பாளர் தவிர பிற வியாபாரிகள் ரூ.2000 கட்டணமாகும். ரூ.3000 மற்றும் ரூ.5000 தயாரிப்பு அளவை பொறுத்து கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விவரங்களுக்கு அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்களை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்தில் நேரடியாபக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். www.fssai.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

இதனிடையே, உணவு பொருள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை சம்பந்தமான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், பொதுமக்கள [email protected] என்ற ஈ-மெயில் வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...