தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு

ரயில் நிலையத்தில் இருந்து தொலைவில் வசித்து வரும் பொதுமக்களுக்காக அருகிலுள்ள தபால் நிலையங்களிலே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாட்டின் பல்வேறு இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தபால்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொண்டு வருகிறது. இந்த முன்பதிவு மையம் கோவையில் பாப்பநாயக்கன்புதுார் துணை தபால் நிலையத்தில், 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 

இதில், ஓபன் டிக்கெட் தவிர்த்து மூத்த குடிமகன்கள், ஏ.சி., 2-ம் வகுப்பு, சாதாரண முன்பதிவு, தக்கல் உள்ளிட்ட டிக்கெட்கள் தபால் நிலையங்களில் முன்பதிவு செய்து தரப்படுகின்றன. சமீபகாலமாக இவ்வசதியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்ததை அடுத்து, மேலும் ஒரு வருடத்துக்கு தபால் நிலையங்களின் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை தபால் நிலைய அதிகாரி கூறுகையில், கோவையில் இச்சேவை பாப்பநாயக்கன்புதுார் துணை தபால் நிலையத்தில் மட்டும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இச்சேவையை பயன்படுத்துவதற்கு பாப்பநாயக்கன்புதுார் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் இங்கு காலை 9 மணி முதலே வருகை புரிகின்றனர். இதன்மூலம் எளிய முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவை செய்து கொள்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கென ஆன்லைன் வசதி இருப்பினும், பெரும்பாலானோர் ஒரே சமயத்தில் பயன்படுத்தும்போது சர்வர் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. அச்சமயம் தபால்நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது விரைவில் சேவையை அளிக்க முடிகிறது. இவ்வசதியை அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...