வங்கி உதவியாளர் பணிக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்வு- வாய்ப்பு பறிக்கப்படுவதாக மாணவர்கள் புகார்

தமிழகத்தில் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டு, பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக வங்கி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவாக ஆயிரத்து 277 வங்கி உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுத்துறை வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. 

பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் 6 மாதங்களுக்குள் மாநில மொழி தேர்வு நடத்த முடிவு செயப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில மொழி தேர்வு நடத்தப்படமால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், பிராந்திய மொழி தேர்வு புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். பிற மாநில இளைஞர்கள் அதிகளவில் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழகத்தை சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், தமிழக மாணவர்கள் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களை புறக்கணிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் வங்கிகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும். 

எனவே, தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 277 பணியிடங்களும் தமிழக மாணவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும், இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தபால் மூலம் மனு அளிக்க உள்ளோம்" இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...