தமிழகத்தில் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டு, பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக வங்கி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:-
''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவாக ஆயிரத்து 277 வங்கி உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுத்துறை வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் 6 மாதங்களுக்குள் மாநில மொழி தேர்வு நடத்த முடிவு செயப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில மொழி தேர்வு நடத்தப்படமால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பிராந்திய மொழி தேர்வு புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். பிற மாநில இளைஞர்கள் அதிகளவில் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழகத்தை சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், தமிழக மாணவர்கள் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களை புறக்கணிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் வங்கிகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 277 பணியிடங்களும் தமிழக மாணவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும், இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தபால் மூலம் மனு அளிக்க உள்ளோம்" இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:-
''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவாக ஆயிரத்து 277 வங்கி உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுத்துறை வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் 6 மாதங்களுக்குள் மாநில மொழி தேர்வு நடத்த முடிவு செயப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில மொழி தேர்வு நடத்தப்படமால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பிராந்திய மொழி தேர்வு புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். பிற மாநில இளைஞர்கள் அதிகளவில் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழகத்தை சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், தமிழக மாணவர்கள் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களை புறக்கணிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் வங்கிகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 277 பணியிடங்களும் தமிழக மாணவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும், இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தபால் மூலம் மனு அளிக்க உள்ளோம்" இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.