நீர்நிலைகளை அசுத்தம் செய்தால் சிறை தண்டனை - கேரள அரசு அதிரடி அறிவிப்பு

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த அரசு தற்போது "ஹரிதா கேரளம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கேரளாவை தூய்மையாகவும், பசுமையாகவும் வைப்பதே நோக்கமாகும். 

இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் கேரள அரசு செய்து வருகிறது. மாநிலத்தை தூய்மையாக வைப்பதற்காக கேரள அரசு மற்றும் சுட்சித்வா மிஷன் அமைப்புடன் கேரள போலீஸாரும் இணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ”ஹரிதா கேரளம்’’ திட்டம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதோ அல்லது அசுத்தம் செய்வதோ சட்டப்படி விரோதம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நீர்நிலைகளை அசுத்தம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டமுன்வடிவு நீர்பாசனத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் குளங்கள் பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுடன் கலந்து பேசி சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. 

கேரள அரசின் இந்த புதிய சட்டத்தால், குப்பைக் குளமாக காட்சியளிக்கும் நீர்நிலைகள் மற்றும் கழிவுகள் கலக்கப்படுவது போன்றவை தடுக்கப்படுகின்றன.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...