நீர்நிலைகளை அசுத்தம் செய்தால் சிறை தண்டனை - கேரள அரசு அதிரடி அறிவிப்பு

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த அரசு தற்போது "ஹரிதா கேரளம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கேரளாவை தூய்மையாகவும், பசுமையாகவும் வைப்பதே நோக்கமாகும். 

இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் கேரள அரசு செய்து வருகிறது. மாநிலத்தை தூய்மையாக வைப்பதற்காக கேரள அரசு மற்றும் சுட்சித்வா மிஷன் அமைப்புடன் கேரள போலீஸாரும் இணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ”ஹரிதா கேரளம்’’ திட்டம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதோ அல்லது அசுத்தம் செய்வதோ சட்டப்படி விரோதம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நீர்நிலைகளை அசுத்தம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டமுன்வடிவு நீர்பாசனத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் குளங்கள் பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுடன் கலந்து பேசி சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. 

கேரள அரசின் இந்த புதிய சட்டத்தால், குப்பைக் குளமாக காட்சியளிக்கும் நீர்நிலைகள் மற்றும் கழிவுகள் கலக்கப்படுவது போன்றவை தடுக்கப்படுகின்றன.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...