தோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்க மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை

கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவர். அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுக்களுக்கு தகுதியான நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. 

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த முன்னாள் கேப்டன் தோனியை, நாட்டின் உயரிய 3-வது சிறந்த விருதான பத்ம பூஷண் விருதுக்கு, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. தோனியை தவிர வேறு யாரையும் பத்ம விருதுகளுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவில்லை. ஏற்கனவே தோனி, கேல் ரத்னா (2007), பத்ம ஸ்ரீ (2009) விருதுகள் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வந்த தோனி(36),  இதுவரை 302 ஒருநாள் (9737 ரன்), 90 டெஸ்ட் (4876 ரன்), 78 சர்வதேச 'டுவென்டி-20' (1212 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் 'நம்பர்-1' இடம் பிடித்தது. இந்திய அணிக்கு மூன்றுவிதமான (2007ல் 'டுவென்டி-20', 2011ல் 50 ஓவர் மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி) உலக கோப்பை பெற்றுத் தந்தார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...