கோவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வனவிலங்கு வாரக் கொண்டாட்டம்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வனவிலங்கு வாரம் எனும் நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு போட்டிகளை நடத்த கோவை வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வரும் அக்டோபர் முதல் வார ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் போட்டிகளை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக, மாவட்ட வனத்துறை அதிகாரி என்.சதிஷ் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு 3 விதமான போட்டிகள் நடத்தப்படும். வனம் மற்றும் விலங்குகள் குறித்த வினாடி, வினா, விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான ஓவியப் போட்டி மற்றும் வனவிலங்குகள் குறித்த பேச்சுப்போட்டி நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே வினாடி வினா போட்டி மற்றும்  வனவிலங்குகள் குறித்த பேச்சுப்போட்டிக்கு தகுதியுடையவர்கள். விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான ஓவியப் போட்டி பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் 6 குழுக்களாக நடத்தப்படும். 

வனவிலங்கு வாரக் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் வரும் 21-ம் தேதிக்குள் பெயர் பட்டியலை சமர்பிக்க வேண்டும். வாரந்தோறும் போட்டியில் பங்கேற்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை வடகோவையில் உள்ள தமிழக வனத்துறை கழக வளாகத்திற்கு வரவேண்டும். 

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வன அலுவலகம், கோவை - 0422 - 2456911

எஸ்.சுரேஷ், வனஅதிகாரி, கோவை - 9047066460

எம்.செந்தில், வனஅதிகாரி, மதுக்கரை - 9994449248

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...