கோவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வனவிலங்கு வாரக் கொண்டாட்டம்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வனவிலங்கு வாரம் எனும் நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு போட்டிகளை நடத்த கோவை வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வரும் அக்டோபர் முதல் வார ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் போட்டிகளை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக, மாவட்ட வனத்துறை அதிகாரி என்.சதிஷ் எழுதியுள்ள கடிதத்தில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு 3 விதமான போட்டிகள் நடத்தப்படும். வனம் மற்றும் விலங்குகள் குறித்த வினாடி, வினா, விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான ஓவியப் போட்டி மற்றும் வனவிலங்குகள் குறித்த பேச்சுப்போட்டி நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே வினாடி வினா போட்டி மற்றும்  வனவிலங்குகள் குறித்த பேச்சுப்போட்டிக்கு தகுதியுடையவர்கள். விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான ஓவியப் போட்டி பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் 6 குழுக்களாக நடத்தப்படும். 

வனவிலங்கு வாரக் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் வரும் 21-ம் தேதிக்குள் பெயர் பட்டியலை சமர்பிக்க வேண்டும். வாரந்தோறும் போட்டியில் பங்கேற்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை வடகோவையில் உள்ள தமிழக வனத்துறை கழக வளாகத்திற்கு வரவேண்டும். 

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வன அலுவலகம், கோவை - 0422 - 2456911

எஸ்.சுரேஷ், வனஅதிகாரி, கோவை - 9047066460

எம்.செந்தில், வனஅதிகாரி, மதுக்கரை - 9994449248

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...