கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரன் (21). அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு தனது உறவுப்பெண்ணான 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிறுமியை பறிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்து பெற்றோரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் இந்திரன் என்பவரே சிறுமியை கர்பமாக்கியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் மகளிர் போலீசார் இந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.