கோவை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் சிரமப்படுத்திவருகிறது. அதேபோல், கடும் காற்று மற்றும் மழையால் சேதமடைந்த பல ஃபளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே தலைக்கு மேல் தொங்கியபடி பொதுமக்களை அச்சுருத்திவருகிறது. கணபதி அருகே அமைந்திருக்கும் ஆவரம்பாளையம் பேருந்து நிலையத்தில் தே.மு.தி.க சார்பில் வைக்கப்பட்டிருக்கும் ஃபளக்ஸ் பேனர், குறிப்பிட்ட காலத்தில் அகற்றபடாததால், பழத்த மழையால் சேதமடைந்து, துருப்பிடித்த பிடித்துஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பயனிகள் பேருந்துக்காக இந்த பேனருக்கு கீழ்தான் காத்திருக்கின்றனர், இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களுக்கு பேனர் அவிழ்ந்து விழும் நிலையில் தொங்குவதே தெரியாது. உடனடியாக இவை அகற்றபடாவிட்டால் பொதுமக்களை பெருமளவு பாதிக்கும் என்று எச்சரிக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ரவி.

தினமும் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வெகுவிரைவாக அந்த பேனரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

போட்டோக்கு போஸ் கொடுத்து, சிரித்தமுகத்தோடு தம் தலைவர்களை வாழ்த்தி வணங்குவதில் இருக்கும் ஆர்வம், மக்கள் நலனில் இல்லை என உணர்த்துகிறது சாய்ந்து முறிந்த இந்த ஃபளக்ஸ் பேனர்கள்.

பயனிகள் பேருந்துக்காக இந்த பேனருக்கு கீழ்தான் காத்திருக்கின்றனர், இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களுக்கு பேனர் அவிழ்ந்து விழும் நிலையில் தொங்குவதே தெரியாது. உடனடியாக இவை அகற்றபடாவிட்டால் பொதுமக்களை பெருமளவு பாதிக்கும் என்று எச்சரிக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ரவி.

தினமும் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வெகுவிரைவாக அந்த பேனரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

போட்டோக்கு போஸ் கொடுத்து, சிரித்தமுகத்தோடு தம் தலைவர்களை வாழ்த்தி வணங்குவதில் இருக்கும் ஆர்வம், மக்கள் நலனில் இல்லை என உணர்த்துகிறது சாய்ந்து முறிந்த இந்த ஃபளக்ஸ் பேனர்கள்.