மதவெறி படுகொலைகளைக் கண்டித்து மக்கள் சிவில் உரிமை கழகம் கோவையில் கருத்தரங்கு



மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் மதவெறி படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கம் கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் முற்போக்காளர்கள் படுகொலை அதிகரித்து இருப்பதாகவும், மக்களிடையே மத துவேஷத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாகவும் சிபிஐ எம்.எல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வீ.சங்கர் குற்றம்சாட்டினார்.

மேலும், கவுரி லங்கேஷ் சங்பரிவார் அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், மதச்சார்பின்மை கொள்கை மற்றும் லிங்காயத்துகள் இந்து மதத்தில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்ததற்காக அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...