மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் மதவெறி படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கம் கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் முற்போக்காளர்கள் படுகொலை அதிகரித்து இருப்பதாகவும், மக்களிடையே மத துவேஷத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாகவும் சிபிஐ எம்.எல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வீ.சங்கர் குற்றம்சாட்டினார்.
மேலும், கவுரி லங்கேஷ் சங்பரிவார் அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், மதச்சார்பின்மை கொள்கை மற்றும் லிங்காயத்துகள் இந்து மதத்தில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்ததற்காக அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.