திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரூபன், காங்கேயம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து ரூபனின் பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மாலை ரூபன் பரிதாபமாக பலியானார்.
கோவையில் டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.