கோவையில் கட்டிடக்கலைக் குறித்த 3 நாள் கண்காட்சி செப்., 22-ம் தேதி தொடக்கம்


ஐ ஏட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் கட்டுமான தொழில் மற்றும் கட்டிடக்கலைத் தொடர்பான கண்காட்சிகளை தென்னிந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை முதலில் சென்னையில் சி.ஏ.ஐ. கண்காட்சி 2017 என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியின் மூலம் தொழில்நிறுவனம், கட்டிடப் பணியாளர்கள், கட்டமைப்பினர் மற்றும் கட்டுமான உபகரணங்களை செய்வர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் பாலமாக உள்ளது. 

இந்த நிலையில், "சி.ஏ.ஐ. கண்காட்சி 2017" என்ற கண்காட்சியை கோவையில் நடத்த ஐ ஏட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் கட்டிடக்கலையில் உள்ள சிறந்த படைப்புகள், புதிய தயாரிப்புகள் மற்றும் யோசனைகளை பறிமாறிக் கொள்ள உதவியாக அமையும். 

கோவையில் நடக்கும் கண்காட்சிக்கு டைட்டில் ஸ்பான்சர் தூசன் பாப்கேட் ஆகும். மேலும், டெக்னோரெயில், நிப்பான் பெயிண்ட், ஜெம் பெயிண்ட், பிரைம், கமய் எலிவேட்டர்ஸ் மற்றும் கிளாஷிக் கிச்சன் போன்றை கோ-ஸ்பான்சர்களாக உள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கிய இந்தக் கண்காட்சிகள், அதிக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்டிருப்பதால், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டில், சென்னை, கோவையை தொடர்ந்து, ஐதராபாத், கோவா போன்ற நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...