வால்பாறை முக்கிய சாலையில் மரம் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சாலையின் குறுக்கே மரம் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி- வால்பாறை வரையிலான மலைப் பாதையானது 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. அடர்ந்த மலைத் தொடரின் குறுக்கே செல்லும் இந்த மலைப்பாதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் பாதையாகும்.

இந்நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரச்சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.



கடந்த சனிக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் வால்பாறை செல்லும் 22-வது கொண்டை ஊசி வளைவில் மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த சாலை வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



தொடர்ந்து, பயணிகள், பொதுமக்கள், வனத்துறையினருடன் இணைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்குப் பின் அதிகாலை சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...