வால்பாறை சாலையின் குறுக்கே மரம் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி- வால்பாறை வரையிலான மலைப் பாதையானது 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. அடர்ந்த மலைத் தொடரின் குறுக்கே செல்லும் இந்த மலைப்பாதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் பாதையாகும்.
இந்நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரச்சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் வால்பாறை செல்லும் 22-வது கொண்டை ஊசி வளைவில் மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த சாலை வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, பயணிகள், பொதுமக்கள், வனத்துறையினருடன் இணைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்குப் பின் அதிகாலை சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது.

பொள்ளாச்சி- வால்பாறை வரையிலான மலைப் பாதையானது 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. அடர்ந்த மலைத் தொடரின் குறுக்கே செல்லும் இந்த மலைப்பாதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் பாதையாகும்.
இந்நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரச்சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் வால்பாறை செல்லும் 22-வது கொண்டை ஊசி வளைவில் மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த சாலை வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, பயணிகள், பொதுமக்கள், வனத்துறையினருடன் இணைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்குப் பின் அதிகாலை சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது.