மாற்றுத்திறனாளிக்கான சலுகை வழங்க புறக்கணிப்பதால் தற்கொலை செய்யப்போவதாக ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 18 வருடங்களாக அரசிடம் சலுகை கேட்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து மாரியம்மாள் கூறியதாவது:-

மாற்றுத் திறனாளியான நான் பெட்டி கடை வைக்க கடன் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். பல முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் தனக்கு கடன் வழங்கப்படவில்லை.

மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் என்னால் தொடர்ந்து வாடகைப் பணம் தரமுடியாத நிலையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்குமாறும் விண்ணப்பம் செய்தேன். அதுகுறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

கடந்த 18 வருடங்களாக பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்தும் தனக்கு எந்த ஒரு உதவியும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் தராமல் உள்ளதால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...