கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 18 வருடங்களாக அரசிடம் சலுகை கேட்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதுகுறித்து மாரியம்மாள் கூறியதாவது:-
மாற்றுத் திறனாளியான நான் பெட்டி கடை வைக்க கடன் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். பல முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் தனக்கு கடன் வழங்கப்படவில்லை.
மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் என்னால் தொடர்ந்து வாடகைப் பணம் தரமுடியாத நிலையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்குமாறும் விண்ணப்பம் செய்தேன். அதுகுறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
கடந்த 18 வருடங்களாக பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்தும் தனக்கு எந்த ஒரு உதவியும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் தராமல் உள்ளதால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறினார்.
இதுகுறித்து மாரியம்மாள் கூறியதாவது:-
மாற்றுத் திறனாளியான நான் பெட்டி கடை வைக்க கடன் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். பல முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் தனக்கு கடன் வழங்கப்படவில்லை.
மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் என்னால் தொடர்ந்து வாடகைப் பணம் தரமுடியாத நிலையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்குமாறும் விண்ணப்பம் செய்தேன். அதுகுறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
கடந்த 18 வருடங்களாக பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்தும் தனக்கு எந்த ஒரு உதவியும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் தராமல் உள்ளதால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறினார்.