கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் முக்கிய அணையாக உள்ளது. இந்த அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்திற்கும் வழங்கப்படுகிறது. இது தவிர, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்தாண்டு பருவமழை சரிவர பொழியாத நிலையில் கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான அணைகள் வறண்டன. 

இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் ஆழியாறு அணை, சோலையார் அணை, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வர துவங்கியுள்ளது.

அணைகளில் நீர்மட்டம் விபரம்:-

சோலையார் அணையின் நீர்மட்டம் 130.53/160 அடி. தற்போது, 5549.30 கன அடி நீர்வரத்து உள்ளது. 886.57 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையாறு அணை நிர் பிடிப்பு பகுதியில் 170 மி.மீ மழை அளவு உள்ளது.

பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 35.40/72 அடி ஆகும். தற்போது, 5186 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 903 கன அடி நிர் வெளியேற்றப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 127 மி.மீ மழை அளவு உள்ளது. 

86.80/120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது, 1154 கன அடி நீர்வரத்து உள்ளது. இங்கிருந்து 9 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆழியாருக்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதியில் 24.6 மி.மீ மழை பெய்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம்- உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 43.73/60 அடி ஆகும். 640 நீர் வரத்துள்ளது. இங்கிருந்து தற்போது, 1233 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 20 மி.மீ மழை அளவு உள்ளது.

அமராவதி அணையின் மொத்த நீர்மட்டம் 79.30/90 அடி ஆகும். இங்கு நீர்வரத்து 1578 கன அடி ஆக உள்ளது. அமராவதி அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 18 மி.மீ மழை அளவு உள்ளது. 

கோவை மாவட்டம், வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவக்கமாக 109 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது. வால்பாறைக்கு உட்பட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை விபரம் பின்வருமாறு:-

அப்பர் நீராறு - 172 மி.மீ, லோயர் நீராறு - 185 மி.மீ, காடம்பாறை - 55 மி.மீ, சர்க்கார்பதி - 110 மி.மீ, வேட்டைக்காரன் புதூர் - 26.6 மி.மீ, மணக்கடவு - 30.4 மி.மீ, தூணக்கடவு - 70 மி.மீ, பெருவாரிபள்ளம் - 82 மி.மீ, அப்பர் ஆழியார் - 32 மி.மீ.

பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகள்:-

காங்கேயம் - 5 மி.மீ, நவமலை - 16 மி.மீ, பொள்ளாச்சி - 50.8 மி.மீ, நல்லாறு - 22 மி.மீ, நெகமம் - 21 மி.மீ, சுல்தான்பேட்டை -16 மி.மீ, பொங்களுர் - 10 மி.மீ, உப்பாறு - 5 மி.மீ.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...