ஸ்மார்ட் ரேசன் கார்டில் காஜலைத் தொடர்ந்து விநாயகர் படம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்தது. இது பெரிய சர்ச்சையானதை அடுத்து, அப்பெண்ணிற்கு மாற்று ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. இந்த பிரச்னை அடங்குவதற்குள் திருப்பூரிலும் இதே போன்ற ஒரு குழப்பம் நடந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் ஊராட்சியை சேர்ந்த விவசாயி நல்லசிவம்(47). இவர் குடியிருக்கும் பகுதிக்கான ரேஷன் கடை சுங்காரமடக்கில் உள்ளது. ஸ்மார்ட் ரேஷன் கார்டு வந்துள்ளதை கேள்விப்பட்ட நல்லசிவத்தின் மனைவி சுமதி, சுங்காரமடக்கு ரேஷன் கடைக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டை வாங்க சென்றார். கூட்டம் அலைமோதியதால் ஸ்மார்ட் ரேஷன் கார்டை சரிபார்க்காமல் வாங்கி வந்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு வந்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில் குடும்ப தலைவர் புகைப்படம் அச்சிடப்படவேண்டிய இடத்தில் விநாயகர் சுவாமி படம் இருந்தது. ஆனால் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெயர்கள் சரியாக இருந்தன. அந்த ரேஷன் கடைக்கு சென்று விவரம் கேட்டார். ரேஷன் கடை ஊழியர் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் இ-சேவை மையத்திற்கு சென்று படத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

இதேபோல, தர்மபுரி மாவட்டம் போசிநாயக்கன அள்ளி பகுதியில் மகேஷ் சின்னசாமி என்பவரது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் புகைப்படம் இருக்க வேண்டிய பகுதியில் செருப்பு அணிந்த கால் புகைப்படம் இடம் பெற்று இருந்தது. வேறு ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. 

அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டில் இதுபோன்ற புகைப்படங்கள் மாறி வருவதை தடுக்க, அதிகாரிகள் கவனமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...