கோவையில் சிறந்த கட்டிடக் கலைக்கான விருதுகள் வழங்கி கவுரவிப்பு

பெரிதும் கொண்டாடப்பட்ட வெள்ளிவிழா பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமான ஜே.கே. சிமெண்ட் லிமிடெட், இந்த ஆண்டுக்கான சிறந்த கட்டிடக் கலைக்கான விருதுகள் வழங்கும் விழாவில் 26வது பதிப்பை கோயம்புத்தூரில் நேற்று நடத்தியது.

இந்திய கௌரவம் மிக்க இந்த விருது விழாவில், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகரும் மற்றும் முன்னாள் தலைவருமான மு.ராதாகிருஷண்ன் மற்றும் ஜே.கே. சிமெண்ட்டின் ராகவ்பட் சிங்கானியா ஆகியோர் பங்கேற்றனர். தொழில்துறை முன்னோடிகளில் தீவிர பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான சிறந்த கட்டிடக் கலைக்கான விருதுகள் 26-ம் பதிப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த கட்டிடக் கலைக்கான விருதுகள் வழங்குவது ஜே.கே. சிமெண்ட் நிறுவனத்தின் வருடாந்திர முக்கிய நிகழ்வாகும். இதன் இலக்கு, உலகளாவிய அளவில் மிகச்சிறந்த திறமைசாலிகளை அங்கீகரித்தல் மற்றும் ஊக்குவித்தலாகும். தனது வெற்றிகரமான இயக்கத்தை தொடரும் வகையில், இந்த ஆண்டு ஜே.கே. சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா மற்றும் அண்டை நாடுகளான வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் 199 நுழைவுகள் சமர்பிக்கப்பட்டன

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை வழங்கப்படும் மிகுந்த கௌரவம் வாய்ந்த விருதான “கிரேட் மாஸ்டர்ஸ் விருது” கட்டிக்கலை பிரிவில் பல ஆண்டுகளாக மிகச்சிறந்த செயல்பாட்டினை மேற்கொண்டு வரும் கட்டிடக்கலை நிபுணர் ஷிரிஷ் பெரிக்கு  வழங்கப்பட்டுள்ளது. பூனாவில் ஸ்லம் ரீஹெபிலேஷன் திட்டத்தை மேற்கொண்ட கட்டிடக்கலை நிபுணர் பிரசன்னா தேசாயிக்கு ஆண்டின் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் விருது வழங்கப்பட்டது 

இவை தவிர்த்து, இந்த ஆண்டின் கிரீன் அர்க்கிடெக்சர் விருது குஜராத்தைத் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் உதய் மற்றும் மௌசமி அந்தாரே ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இளம் மற்றும் திறமைமிக்க வளரும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கு தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான விருதுகள் வழங்கப்பட்டன. விருது வகையினங்களில், கட்டிடக்கலை பிரிவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான அங்கீகாரமும் உட்பட்டுள்ளது. இளம் கட்டிடக்கலை நிபுணர் விருதை பெங்களுரூவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சுதீப் ஸ்ரீனிவாஸ் பெற்றார். ஆர்க்கிடெக்ட் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் விருது, பீகாரைச் சேர்ந்த தீபன் போஸ் என்பருக்கு, அவரது நிமாட்லா கட்டில் மேற்கொள்ளப்பட்ட “கிரீமடோரியம் கம் மெமோரியல் காம்பிளெக்ஸ்” திட்டத்திற்காக வழங்கப்பட்டது. இளம் ஆர்க்கிடெக்ட் விருது, கேரளாவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஹரிதாவிற்கு, அவரது “சென்டர் ஃபார் ஹார்மோனியஸ் லில்லிங்” திட்டத்திற்காக வழங்கப்பட்டது.

எல்லா ஆண்டுகளையும் போல்,யுலுயு அனைத்து எல்லைகளையும் கடக்கும் வகையில், ஃபோகஸ் கண்ட்ரீஸ் ஆர்க்கிடெக்ட் ஆஃப் தி இயர் விருதை வழங்கியது. இந்த ஆண்டு, வெளிநாடுகளுக்கான ஆர்க்கிடெக்ட் ஆஃப் இயர் விருது, தாக்காவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஜுபையர் ஹாஸனுக்கு, அவரது லூம் ஷேட் திட்டத்திற்காக வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு பிரிவுகளிலும் விருகள் வழங்கப்பட்டன.

இந்த விருது வழங்கும் விழாவின் வெற்றி குறித்து ஜே.கே. சிமெண்ட் லிமிடெட்டின் தலைவர் மேலாண்மை இயக்குனர் யதுபதி சிங்கானியா பேசுகையில், 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவின் வெள்ளி விழாவைக் கொண்டாடிய பிறகு, மீண்டு ஒரு முறை, மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்கிய கட்டிடக்கலை நிபுணர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகளை வழங்குவதில் ஜே.கே. சிமெண்ட் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. இன்னும் கட்டிடக்கலை பிரிவில் பல்வேறு விருதுகளையும் மற்றும் பாராட்டுதல்களையும் பெற்றுக் குவிக்கவுள்ள இந்த விருது வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் அவர்கள் இன்னும் அதிக வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள், ஆழ்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் பரிசீலனைகளுக்குப் பின்பு, கவனமான சோதனை மற்றும் திட்டமதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டபின் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  நடுவர்கள் குழுவின் தலைவராக, ஜே.கே. சிமெண்ட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் யதுபதி சிங்கானியா விளங்கினார். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பிரபலமான கட்டிடக்கலைஞர்களுடன், பேராசிரியர் சேத்தன் வைத்யா, கட்டிடக் கலைஞர். பாலகிருஷ்ணா ஏ.தோஷி, கட்டிடக்கலைஞர் முசு ஜெய்ஸிம்ட உட்பட பல்வேறு பிரபலங்களும் இக்குழிவில் இடம்பெற்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...