பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் தூய்மையை கடைபிடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கழிப்பறைகள் பயன்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்க துவக்க விழா நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தூய்மையே சேவை என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தூய்மையே சேவை இயக்கம் நமது மாவட்டத்தில் 15.02.2017 முதல் 02.10.2017 வரை நடத்தப்பட்டு வருகின்றது. இம்முகாமில் அனைத்து அலுவலர்களும் முழு ஈடுபாடுடன் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வுகளில் ஈடுபடவுள்ளனர். அனைத்து நிகழ்வினையும் ஆவணப்படுத்தி அரசுக்கு தங்களது பணிகளை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



மேலும், இது தொடர்பாக தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வின் வாயிலாக பொதுமக்கள் அனைவரும் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், நீர் நிலைகள் மற்றம் இதர இடங்களில் தூய்மையை கடைபிடிப்போம் என்றும் வீடுகளில் கழிப்பறைகளின் பயன்பாட்டினையும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினையும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியனை ஏற்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடபிரிய உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...