பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் தூய்மையை கடைபிடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கழிப்பறைகள் பயன்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்க துவக்க விழா நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தூய்மையே சேவை என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தூய்மையே சேவை இயக்கம் நமது மாவட்டத்தில் 15.02.2017 முதல் 02.10.2017 வரை நடத்தப்பட்டு வருகின்றது. இம்முகாமில் அனைத்து அலுவலர்களும் முழு ஈடுபாடுடன் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வுகளில் ஈடுபடவுள்ளனர். அனைத்து நிகழ்வினையும் ஆவணப்படுத்தி அரசுக்கு தங்களது பணிகளை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



மேலும், இது தொடர்பாக தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வின் வாயிலாக பொதுமக்கள் அனைவரும் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், நீர் நிலைகள் மற்றம் இதர இடங்களில் தூய்மையை கடைபிடிப்போம் என்றும் வீடுகளில் கழிப்பறைகளின் பயன்பாட்டினையும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினையும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியனை ஏற்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடபிரிய உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...