ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் - தமிழக அரசுக்கு மலை மாவட்ட மக்கள் நன்றி

தமிழக அரசின் உத்தரவின்படி, உணவு வழங்கல் துறையின் சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டைகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டை புதிதாக வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,07,049 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், உதகை வட்டத்தில் 31,996 ஸ்மார்ட் கார்டுகளும், குன்னூர் வட்டத்தில் 29,974 ஸ்மார்ட் கார்டுகளும், கோத்தகிரி வட்டத்தில் 18092 ஸ்மார்ட் கார்டுகளும், குந்தா வட்டத்தில் 11089 ஸ்மார்ட் கார்டுகளும், கூடலூர் வட்டத்தில் 22442 ஸ்மார்ட் கார்டுகளும், பந்தலூர் வட்டத்தில் 20554 ஸ்மார்ட் கார்டுகளும் ஆக மொத்தம் 1,34,147 ஸ்மார்ட் கார்டுகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலுள்ள நியாயவிலை கடைகளில் எவ்வித கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 72,902 குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு படிப்படியாக வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்திற்கு சென்று சேவை கட்டணமாக ரூ.30 செலுத்தி திருத்தம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்களில் இந்த சேவையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் கார்டு பெற்ற பயனாளி சுமதி கூறுகையில், நான் மடித்தொரை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஸ்மார்ட் கார்டு கிடைத்து விட்டது. எனவே தற்போது நான் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் கார்டாக மாற்றி தந்ததால் நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், பாமாயில், மண்ணெண்ணெய் எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதையும், நியாய விலைக்கடையின் பணி நேரத்தையும் ஆகியவற்றை கைபேசிக்கு வரும் எஸ்.எம்.எஸ்ஸின் மூலம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. எனவே இந்த திட்டத்தினை கொண்டு வந்த தமிழக அரசிற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 



Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...