கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்றுள்ள 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சமீப காலங்களாக சிறையில் இருக்கும் குற்றவாளிகள் உடல்நலக்குறைவால் பலியாவது அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி ஆயுள் தண்டனை கைதியான அந்தோனி ஆனந்த் (43) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து, மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றிருந்த குருசாமி (59) என்பவர் கடந்த 1-ம் தேதி பலியானர்.
இந்த சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்த மாணிக்கம் (57), நாராயணசாமி (70) ஆகியோர் கடந்த 3 மற்றும் 10-ம் தேதி உடல்நலக்குறைவால் பலியாகினர். இந்த நிலையில், இன்றும் (16.09.2017) ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதான ராமசாமி (83) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த ராமசாமிக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை காவலர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 3 வார காலங்களில் சிறை கைதிகள் 5 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறையில் முதலுதவி மற்றும் உணவு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.
இந்த சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்த மாணிக்கம் (57), நாராயணசாமி (70) ஆகியோர் கடந்த 3 மற்றும் 10-ம் தேதி உடல்நலக்குறைவால் பலியாகினர். இந்த நிலையில், இன்றும் (16.09.2017) ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதான ராமசாமி (83) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த ராமசாமிக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை காவலர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 3 வார காலங்களில் சிறை கைதிகள் 5 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறையில் முதலுதவி மற்றும் உணவு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.