நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு சியாசத் உருது தினசரி மற்றும் தன்னார்வ அமைப்பின் கூட்டமைப்பு ஆதரவு

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் பேரணியின் ஒரு பகுதியாக ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு, நேற்று (செப்.15) ஐதராபாத் சியாசத் உருது தினசரி மற்றும் தன்னார்வ அமைப்பின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதில், இஸ்லாமிய மதத்தலைவர் மௌலானா சாதிக் மொஹிதீன் பாஹீம், தெலுங்கானா துணை முதலமைச்சர் முகம்மது மஹ்மூத் அலி, சியாசத் தலைமை பதிப்பாசிரியர் நவாப் சாஹித் அலிகான், எம்.பி விஸ்வேஸ்வர ரெட்டி, தன்னார்வ அமைப்பின் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் மஸார் ஹுசைன் ஆகியோர் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், நதிகளை மீட்போம் இயக்கத்தை பற்றி விளக்கினார். மேலும், " நீங்கள் நமாஸ் செய்பவராக இருந்தாலும், பஜனை பாடுபவராக இருந்தாலும், தியானம் செய்பவராக இருந்தாலும், நீங்கள் நீர் பருகுபவராக இருந்தால் நதிகளை மீட்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அக்டோபர் 2ம் தேதிக்கு பிறகு நதிகளை மீட்போம் இயக்கத்தின் திட்ட பரிந்துரை அனைவருக்கும் வழங்கப்படும். அனைவரது கருத்துக்களும், பரிந்துரைகளும் இந்த திட்டத்தில் வரவேற்கப்படும்", என்றார்.

மேலும், நதிகளை மீட்கும் இந்த முயற்சியில் கட்சி, அரசியல் பேதமின்றி அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைத்து நதிகளை மீட்க முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

இஸ்லாமிய மதத்தலைவர் மௌலானா சாதிக் மொஹிதீன் பாஹீம் பேசுகையில், " நீர் என்பது இந்த பூமிக்கு இறைவன் அளித்துள்ள பரிசு என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் அனைத்து உயிரினங்களும் நீரை சார்ந்து உள்ளன. நாம் நீரின் மதிப்பு உணர்ந்து வாழ வேண்டும். மனிதன் நீரை மாசுபடுத்தவோ வீண் செய்யவோ கூடாது. நம் நதிகளை காப்பதும் அடுத்த தலைமுறைக்காக நதிகளை பராமரிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை", என்றார்.

நதிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சத்குரு, நாடு முழுவதும் 30 நாட்கள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3-ம் தேதி கோவையில் தொடங்கிய இந்த பயணத்தில் சத்குரு குமரி முதல் இமயம் வரை சுமார் 7,000 கி.மீ. தாமே வாகனம் ஓட்டி 16 மாநிலங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நிகழ்த்த உள்ளார். அக்டோபர் 2ம் தேதி தில்லியில் இப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார்.



அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தனியார் நிறுவனங்கள், சினிமாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரும், விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் பேராதரவு அளித்து வரும் 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' இயக்கத்திற்கு உங்கள் ஆதரவை அளிக்க 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...