கோவை நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் நேற்று(15.09.2017) காலை மாயமாகினர். இதனையறிந்து பதறிப் போன சிறுமிகளின் பெற்றோர்கள், இரண்டு சிறுமிகளும் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், சிறுமிகளை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டனரா? அல்லது பள்ளியை புறக்கணித்து எங்கேயாவது சென்றுள்ளனரா? என்ற கோணங்களில் துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மாணவிகள் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக ரயில்வே போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அமிர்தா வித்யாலயா பள்ளியில் இருந்து மாயமான குழந்தைகளா என்பதை முதலில் உறுதி செய்தனர். பின்னர், மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டனரா? அல்லது பள்ளியை புறக்கணித்து எங்கேயாவது சென்றுள்ளனரா? என்ற கோணங்களில் துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மாணவிகள் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக ரயில்வே போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அமிர்தா வித்யாலயா பள்ளியில் இருந்து மாயமான குழந்தைகளா என்பதை முதலில் உறுதி செய்தனர். பின்னர், மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.