அதிமுகவில் பிளவு கிடையாது- மாநிலங்களவை துணை சபாநாயகர் பேட்டி

அதிமுகவில் பிளவு என்பது கிடையாது என்றும், அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காலப்போக்கில் அவை சரியாகிவிடும் என்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இந்த இயக்கத்தை காப்பது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை தான் தாங்கள் செய்து வருகிறோம். மூன்றில் இரண்டு பங்கு இல்லை என்றால் தான் பிரிந்திருப்பதாக அர்த்தம். தேர்தல் ஆணையம் கூட அதிமுக பிரிந்துள்ளது என்று சொல்லவில்லை.

திராவிட இயக்கத்தின் ஆட்சி தொடர்வதற்கு அண்ணா தான் காரணம். அண்ணா வழியில் தொடர்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக தொடர்ந்து வருகிறார்.

இவ்வாறு மாநிலங்களவை துணை சபாநாயகர் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...