அதிமுகவில் பிளவு என்பது கிடையாது என்றும், அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காலப்போக்கில் அவை சரியாகிவிடும் என்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இந்த இயக்கத்தை காப்பது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை தான் தாங்கள் செய்து வருகிறோம். மூன்றில் இரண்டு பங்கு இல்லை என்றால் தான் பிரிந்திருப்பதாக அர்த்தம். தேர்தல் ஆணையம் கூட அதிமுக பிரிந்துள்ளது என்று சொல்லவில்லை.
திராவிட இயக்கத்தின் ஆட்சி தொடர்வதற்கு அண்ணா தான் காரணம். அண்ணா வழியில் தொடர்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக தொடர்ந்து வருகிறார்.
இவ்வாறு மாநிலங்களவை துணை சபாநாயகர் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இந்த இயக்கத்தை காப்பது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை தான் தாங்கள் செய்து வருகிறோம். மூன்றில் இரண்டு பங்கு இல்லை என்றால் தான் பிரிந்திருப்பதாக அர்த்தம். தேர்தல் ஆணையம் கூட அதிமுக பிரிந்துள்ளது என்று சொல்லவில்லை.
திராவிட இயக்கத்தின் ஆட்சி தொடர்வதற்கு அண்ணா தான் காரணம். அண்ணா வழியில் தொடர்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக தொடர்ந்து வருகிறார்.
இவ்வாறு மாநிலங்களவை துணை சபாநாயகர் தெரிவித்தார்.