பள்ளி சென்ற சிறுமிகள் மாயம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்


கோவை துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் வழக்கம் போல இன்று வாடகை காரில் பள்ளிக்கு சென்றனர். கார் ஓட்டுனர் பள்ளி வாயிலில் சிறுமிகளை இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. 



ஆனால், இரு சிறுமிகளும் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 



புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாயமான சிறுமி பள்ளி சீறுடையை தவிர மாற்று உடையும் கொண்டு வந்ததாக தெரிகிறது. 



இதைத் தொடர்ந்து, சிறுமிகள் இருவரும் பள்ளிக்கு விடுமுறை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் அருகில் உள்ள வணிக வளாகங்களில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். 



இந்த நிலையில், மாயமான சிறுமிகளின் பெற்றோர், பள்ளிக்கு சென்று சிறுமி மாயமானது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், தங்கள் குழந்தைகள் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி பள்ளி வாயில் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். 

பள்ளிக்கு சென்ற இரு சிறுமிகள் மாயமான சம்பவம் கோவையில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...