ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ எனப்படும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, வேலைநிறுத்ததை கைவிடா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த தமிழக அரசு, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அறிவித்தது.
இந்த நிலையில், விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதியம் வழங்கலாமா..? என நடிகர் கமல்ஹாசன் இன்று (15.09.2017) வெளியிட்டுள்ள டுவிட்டில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மேலும், அரசு ஊழியர்கள் வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் கிடையாது என்று சொல்லப்படும் போது , குதிரை பேரத்தில் ஈடுபடும் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி ஊதியம் வழங்கலாம்?. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களது பணியை புறக்கணிக்கும் எம்எல்ஏக்கள் மீதும் நீதிமன்றம் இது போன்ற எச்சரிக்கையை விட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதியம் வழங்கலாமா..? என நடிகர் கமல்ஹாசன் இன்று (15.09.2017) வெளியிட்டுள்ள டுவிட்டில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மேலும், அரசு ஊழியர்கள் வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் கிடையாது என்று சொல்லப்படும் போது , குதிரை பேரத்தில் ஈடுபடும் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி ஊதியம் வழங்கலாம்?. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களது பணியை புறக்கணிக்கும் எம்எல்ஏக்கள் மீதும் நீதிமன்றம் இது போன்ற எச்சரிக்கையை விட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.