நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம்

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், புதிதாக படம் திரைக்கு வரும் படங்ளை, அன்றைய தினமே சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில் வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது. 

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம் 

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில், புதிதாக படம் திரைக்கு வரும் போது, அன்றைய தினமே வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது.

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...