நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம்

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், புதிதாக படம் திரைக்கு வரும் படங்ளை, அன்றைய தினமே சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில் வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது. 

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம் 

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில், புதிதாக படம் திரைக்கு வரும் போது, அன்றைய தினமே வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது.

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...