சோமனூரில் தொடங்கியது ஆய்வு : எட்டப்படுமா தீர்வு ?


சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் ஊழல் இருப்பதாக பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் சோமனூர் பேருந்து நிலைய விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககன் சிங் பேடி தலைமையில் தனி நபர் விசாரணை குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில், இது போன்ற சம்பவங்கள் வரும் காலகட்டத்தில் நடைபெறாமல் இருக்க ககன்சிங் பேடி கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 15) விசாரணையினை துவங்கினார்.

முன்னதாக, இன்று காலை கோவை வந்த ககன் சிங் பேடி, விபத்து நடந்த சோமனூர் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவினருடன் ஆய்வினைத் தொடங்கினார். 

இடிந்து விழுந்த பேருந்து நிலைய மேற்கூரையின் மீதுள்ள இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட்-ன் நிலைப்பு தன்மையினை ககன்சிங் பேடி ஆய்வு செய்து வருகிறார். உடன் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்றுள்ளார்.



ஆய்வு முடிந்த பின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...