வறட்டுப்பாறை எஸ்டேட்டில் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்டவசமாக உயிர்தப்பினர்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 5 மணியளவில் தீடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 



காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் மணி என்பவரின் வீட்டின் அருகாமையில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்ததில் மணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. 



அப்போது வீட்டில் இருந்த மணி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மனைவி அனிதாவுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அருகாமையில் இருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு எஸ்டேட் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வீட்டின் கூரை முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தது. 



இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் வால்பாறை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராட்சத மரம் விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே குடியிருப்பு மற்றும் பள்ளி பகுதிகளில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அரசு மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேலும் பல உயிர்சேதங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...