வறட்டுப்பாறை எஸ்டேட்டில் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்டவசமாக உயிர்தப்பினர்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 5 மணியளவில் தீடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 



காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் மணி என்பவரின் வீட்டின் அருகாமையில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்ததில் மணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. 



அப்போது வீட்டில் இருந்த மணி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மனைவி அனிதாவுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அருகாமையில் இருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு எஸ்டேட் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வீட்டின் கூரை முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தது. 



இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் வால்பாறை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராட்சத மரம் விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே குடியிருப்பு மற்றும் பள்ளி பகுதிகளில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அரசு மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேலும் பல உயிர்சேதங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...