குடிபோதையில் வாகன தணிக்கை செய்த கோவை போலீஸ்காரர்


கோவை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (39). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மருத்துவ விடுப்பில் சென்றாதத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் மரக்கடை பகுதியில் நின்று வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, வாகனத் தணிக்கைக்காக நின்றிருந்த பொதுமக்கள் கார்த்திக்கின் பேச்சால், குடிபோதையில் இருப்பதாக சந்தேகமடைந்தனர். அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்ததில் மது அருந்தியதை, அவர்கள்  உறுதி செய்தனர். 

பின்னர், இது தொடர்பாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், குடிபோதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் கார்த்திக்கை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

இதைத் தொடர்ந்து,  இது தொடர்பான மருத்துவ அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்பிக்க உள்ளனர். போலீஸ் அதிகாரி கார்த்திக் மது அருந்தியது மருத்துவ அறிக்கையில் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும எனத் தெரிகிறது. மேலும். பணி விடுப்பில் இருக்கும் போது, இவ்வாறு நடந்து கொண்டாரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கோவையில் மது போதையில் வாகனத் தணிக்கை செய்த போலீஸ்காரரால், உள்ள சக போலீசார் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...