ஆர்.எஸ் புரம் பகுதியில் 'ஒன் சைடு பார்க்கிங்' முறையை காவல்துறை ஆணையர் துவங்கி வைத்தார்



கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கோவை ஆர்.எஸ் புரம் 23வது வார்டு பகுதிக்குட்பட்ட கெளலிபிரவுன் சாலை முதல் ராமலிங்கம் சாலை வரை மொத்தம் 15 வீதிகளில், 14.09.2017 (இன்று) முதல் 'ஒன் சைடு பார்க்கிங்' முறை அமல்படுத்தப்படுகிறது.



இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று தொடக்கி வைத்தார். பின்னர், இதுகுறித்து அவர் கூறுகையில், "வாகன கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த 23-வது வார்டு பகுதியில் 'ஒன் சைடு பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தி கொடுத்த வெல்ஃபேர் அசோசியேஷன்-க்கு நன்றி. இந்த 'ஒன் சைடு பார்க்கிங்' வசதியினை இங்கு வசிக்கும் பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மாதம் ஒரு பகுதி, என மாதம் ஒரு முறை 'ஒன் சைடு பார்க்கிங்' முறை மாற்றி அமைக்கப்படும்".



மேலும் இதுபற்றி கூறுகையில், "23வது வார்டு குடியிருப்பு மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க 'ஒன் சைடு பார்க்கிங்' அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை இப்பகுதி மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். வீதிகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

திருட்டு மற்றும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, மக்கள் அவரவர் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் சிசிடிவி காமேராக்களை பொறுத்திட வேண்டும், என்று காவல் ஆணையர் அமல்ராஜ் வலியுறுத்தினர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...